24.9.11

மறுபடியும் தோழமையுடன்....






எப்போது இணைவேனோ -என்ற
ஏக்கம் என்னில்
அப்போது எழுந்தது..
அத்தனைக்கும் விடையாய்
மாதம் ஒன்றை நெருங்கையில்
இப்போதே காண்கின்றேன்...

மனதில் ஓர் மகிழ்வும்...
நெஞ்சில் ஓர் நிமிர்வும்...
உதட்டில் ஓர் புன்னகையும் ...
ஏட்டில் ஓர் மாறுதலுமாய்..
மீண்டும் உங்களுடன்
இணைந்து கொள்ளும்
பெருமிதம் இப்போ -இந்த
வலைப் பூவுக்குள்ளே !!!

நலமா!!
என் நேச உறவுகளே..
என் பதிவுலக நெஞ்சங்களே!
உங்களோடு இணைவதில்
உறவுகளே!
உள்ளத்தில் அதிக இன்பம்
ஊற்றாய் பெருகுமே...
எதிரெதிரே கைகுலுக்கி
புன்னகை பூக்கும் நினைவு
உங்களை சந்திக்கையிலே..

பேசப்பட்ட தாய் மொழியும்
மூச்சு அடங்கியபடி
உறங்கு நிலையில்...

பல மைல்கள்
பறந்து வந்தாலும்
பாழ்பட்ட தனிமையோ
விடுபட்டதாய் இல்லை..-ஆனாலும்
உங்களோடு இணைவதில்
தனிமையும் இனிக்குமே...
எண்ணத்தில் சுரக்குமே..
கவிதையை நனைக்குமே..
மீண்டும் உங்களோடு
கைகுலுக்கிய மன
பெருங் கழிப்போடு..............


செம்பகம்..