உயரம் ஏற்ற
ஊக்கம் தந்து
தோள் தட்டிய
தோழமைகளே..-எனது
பதிவுலக உறவுகளே!!!
பிரிகிறேன் பிரிகிறேன்
பதிவுலகை விட்டு
பிரிகிறேன்...
நிரந்தரமற்ற எனது
பதிவுலக வாழ்வில்
வருவதும் போவதுமே-எனது
வாழ்வாச்சு..
சில நாட்களில் வரலாம்....
சிலவேளை..
சில மாதங்களின் பின்னே
சந்திக்கலாம்...
மறந்திடேன் உங்களை..
மறுபடியும் வரும் வரை
மறந்திடாதீர் என்னையும்.!!!!.
காலத்தின் மாற்றங்கள்
சாதகமாயும் ,,,,,சாதகமற்றும்
நிலவுகையில்
உதிப்பதும்.....
சட்டென மறைவதும்
எனது கதையானது...
இன்ரனெற் வசதி
இல்லாதபோதும்..
கணனிக்கு ஓய்வு
கிடைக்காத போதும்
உங்கள் பக்கம் எனது
வருகையும் பின்னூட்டமும்
இல்லாமலே போனது...
காரணம் இதுவே!!!
ஈழத்தில் கண்ட
அவலத்தின் காட்சிகளை
வெளிச்சொல்ல முடியாது போகையில்
எழுத்துக்களில் ஆற்ற நினைத்தேன்..
தனிமை வாட்டியபோது...
மனம் வலிக்கும்போது...
பொழுது போக்காக
ஒரு புறம் இருந்தது
இந்த வலைப்பூ..
வேறு எந்தவித
குறிக்கோளும் எனக்கில்லை..
அண்ணனின் நண்பனால்
வலைத்தள அறிமுகம்..
அவருக்கு எனது
முதல் நன்றி..
கட்டம் கட்டமாய்
சின்னச் சின்னதாய்
நண்பர்களே ..
உங்களின் வருகையால்-நீவீர்
சொல்லும் கருத்துரையால்
மெல்லென
வளர்கிறேன் பதிவுலகில்..
உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்...
உறவுகளே!!!!
மீண்டும் என்
கால் பதிக்கும் வரை
மறந்திடாதீர் என்னை..
பிரிகிறேன் இப்போது..
செம்பகம்..