காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...
சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..
நீழ்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..
வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...
நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..
இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..
எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!
செம்பகம்