27.7.11

காத்திருப்பின் தகிப்பு.





காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...

சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..

நீழ்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..

வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...

நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..

இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..

எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!

செம்பகம்

22.7.11

அடங்காத கொதிப்பு....



















மூச்சுவரை வந்த சுவாசம்
முழுதாய் முடங்கிப்போகிறது
தொண்டைக் குழியோடே..!!!!!
உள்ளக் கொதிப்பால்
உடலோ பற்றியெரிகிறது..

தமிழர் வல்லமையின்
தடம் பதித்த
முத்தான வெளியில்
மூதேவி ஒன்று
தாண்டவம் ஆடியதாம்..!!!
எங்கள் உயிர்களின்
எச்சங்கூட மிச்சமில்லாமல்
உறிஞ்சிக் குடித்த
பிணந்தின்னி கழுகு..
பிச்சை கேட்கிறதாம்..

கும்பிடக் கும்பிட
கொன்று குவித்தவர்..
உயிரோடு கருகிப்போக
குண்டுமழை பொழிந்தவர்...
நச்சு வாயுக்களால்-எங்கள்
மூச்சையே நின்றிடச்செய்தவர்..
சந்ததியே இல்லாமல்
கூண்டோடு அழித்தவர்..
பெற்றவரைத் தின்று
அனாதை பட்டத்தை கொடுத்தவர்..
அழகான பிறப்புக்களை
அங்கவீனர் ஆக்கிய
அட்டூழியக்காரன்...
வரலாறுகள் வாழ்ந்த
வீடுகளை கிண்டி கிழறியவர்..-இப்போ
எங்கள் கோட்டையில்
ஏறி நின்று
என்னையா கேட்கிறீர்???














அவரை வரவேற்க
அறுபத்தெட்டு நம்மவர் !!
ஏனோ போயினர்??
இதுவரைக்கும் புரியவில்லை..

ஐயாவை பார்க்க ஒரு பகுதி..
நடக்கும் நாடகத்தை
விடுப்புப் பார்க்க ஒரு பிரிவு..
வற்புறுத்தலின் அச்சத்தில்
சில பாவிகள்..
எதுவுமே அறியாதவர் ஒரு கூட்டம்..
இப்படியே குவிந்திருக்கும்..
சில கூட்டம்..
அப்படி இருக்கலாமோ???
இது என் சிந்தனை


எங்கள் கடவுள்கள்
எப்போதோ தொலைந்து போனார்கள்..
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்பு கொள்வார்களோ
அதுவும் சந்தேகம் தான்...

முத்த வெளியிலேயே ஐயாவுக்கு
மூச்சுத்திணறல் வந்திருக்கக் கூடாதோ?
நீதி இறந்து போனதால்
இவர்கள் நீடுழிகாலமும்
வாழ்வார்கள் போல்...
அக்கிரமங்கள் கட்டவிழ்க்க கட்டவிழ்க்க
ஆயுளும் அதிகரிக்குமோ ??
ஐயங்களோ அடுக்கடுக்காய் மனதில்
ஐயாவை நினைக்கையில்..

காலம் பதில் சொல்லுமென
காத்திருந்து களைத்தாச்சு..
கண்ணீரை மட்டும்
வழியவிட்டு
கண்ணீர் வற்றியது தான் மிச்சம்..
நடந்ததாய் எதுவுமில்லை..
படுகொலையின் நாயகனுக்கு
பாடையில் ஏற்றுவது எப்போதோ?
மண்கூட இவர் உடலை
உக்கி எடுக்க மறுக்கும்..
அப்படியான மனிதர்க்குத்தான்
இப்படி வாழ்க்கை..
வந்த பெருமூச்சை மட்டும்
பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
என்ன செய்ய !!!!!

செம்பகம்

19.7.11

நீயே என் முதற் கவிதை





முதன் முதலாய் பாடிய 
முதற்கவிதையே அம்மா 
உனை வரிக்க 
வடிவெடுத்த வார்த்தைகளோ  
வரிசைகளாய்...........

சுமையோடு சுமந்து
சுமை தாங்கியானாய்..
பத்து மாதம் தான் -எனை
பத்திரமாய் சுமந்தாய் அல்ல ,,,
இப்போதும்,,,-என்
சுமைதாங்கும் தூண்தானே
நீ அம்மா..

உன்.........
கற்பனைக் கருவறையுள்
கருத்தரித்த கனவுகளோ
கடலைப்போல் என்றாய்
அத்தனையும் .......
நடந்ததும் நடக்காததுமாய்...
நகர்கிறது உன் ஏக்கம்...

வாழ்க்கையோடு காலம் 
வலிந்திளுக்கும் யுத்தத்தில்
வலிமையோடு வாழ 
வழிகள் பல 
கற்றுத் தந்தாய்..
வாழ்கிறேன் என்றாலும் 
முடியவில்லை என்னால்..

உதைத்து உதைத்து
உருண்டு புரண்டு -உன்
உயிர் வாங்கிய போதும்
உனக்கு வலி எடுத்திருக்கும்-ஆனால்,,,
ஈரைந்து மாதமும்
உவகையோடுதானே காத்திருந்தாய் -அதனால்
உனை உதறிச்செல்ல 
உளம் மாற்றிய 
சூழல்கள்... அத்தனையும்
தூக்கி எறிந்தேன்..
ஏனெனில் நீ
உடைந்து போவாய் என்பதற்காய் !!!
உன் கரம் பற்றி வாழ்கின்றேன்...

விலகி வந்த போது 
விதியென்று நினைத்தேன்..
பிரிவு எம்மை 
பிரித்து வைத்தாலும்
அதை வெல்ல 
பாதைகள் தேடுகிறேன்..
காத்திருப்பாயா எனக்காய்!!!

ஏற்றங்களில் ஏறும் போது
பெருமையடைந்தேன் உன் பிள்ளையென்று..
வாழ்க்கை வலித்த போது
வாய்விட்டு கேட்டேன்...
ஏன் என்னை பெற்றாய் என்று!!!
சிரித்த முகத்துடன்
தந்தாய் வரைவிலக்கணம்..
தோல்வியும் துன்பமும்  
தோளின் மேல் குந்திய போதும் 
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,
















அன்னையே நீ 
அருகிலில்லாத தனிமை
வெறுமையான ஒன்றாய் 
வெறுத்துக்கிடக்கிறது...
எட்ட நின்றிடினும் 
தொட்டுவிடு ...உன்
நுனி விரல் தீண்டும் ஸ்பரிசம்
அதுவே போதும்..

அதிக பிரியம் இருப்பதாலோ-உன்
அருகில் வாழ வரமற்றேன்...
அதிசயப்பிறவியே,,,
அற்புதமான அப்பாவை கைப்பிடித்து
அருமையான உடன் பிறப்புக்களை
பரிசளித்தாய்...
நன்றி சொல்ல 
வார்த்தைகளோ என்னிடம் இல்லை ...

சேந்து வாழ முடியாததால் 
சோர்ந்து போகவில்லை-ஏனெனில்
மறுபடியும் உன் கருவறையுள்
எனை அணைத்துக்கொள்வாய்.....
நித்தமும் உன்
நிழலோடு வாழ்வதற்கு,,,


செம்பகம்


உறவுகளே! நான் தற்போது இன்ரனெற் வசதியற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
கிடைத்தவுடன் உங்கள் பக்கம் வருவேன்..

10.7.11

இருண்டு கிடக்கும் வாழ்வில் ஒளியேற்ற வாரீர்...!!!!!

உறவுகளே இந்த வீடியோவைப் பாருங்கள்...
பார்த்த பின் கவிதையை வாசியுங்கள்....
இப்படி ஏராளமான சகோதர/சகோதரிகள் 
மண்ணுக்காக போராடி அங்கங்களை இழந்து தவிக்கிறார்கள்...
அவர்களுக்காக எனது மன ஆதங்கத்தை பகிந்து கொள்கிறேன்....











மனிதம் எப்போதோ
மரத்துப் போனதால்
அணுவணுவாய்
மரித்துக்கொண்டிருக்கிறது -இவர்கள்.
ஆன்மா!!!

சகித்துக் கொள்ள
சக்தியோ........
சத்தியமாய் எனக்கில்லை,,,,,,,,
இரத்தக் கண்ணீரின்
இறுகிய கறையை போக்க
எந்த மனம் இவ்வுலகில்...

பத்திரமாய் பிரசவித்து
பொத்திப் பொத்தி
வளர்த்த கனவுகள்..
செத்துக் கிடக்கும்
பெற்றவரோடு!!!!


இனப்பசிக்காய்
இரை தேடிய இவர்கள்-இப்போ
நிர்கதியிழந்து- இவர்கள்
பசிபோக்க யாருமின்றி!!!!
கண்ணீரின் கதையாகி நிற்கிறது...


பட்ட காயங்கள்..
பறி கொடுத்த அங்கங்கள் ..
உதிர்ந்து போன வாழ்க்கை..
இழந்து போன உறவுகள்...
இத்தனையும் தாண்டி
முடிவின் நுனியை
முட்டும் வரை -இந்த
பூமியில் வாழும் வலியே
மிகக் கொடுமை !!!


மனிதனை மனிதன்
யாசிக்காததால்..
மனங்கள் வலிப்பதை
மனிதன் யோசிப்பதில்லை!!!!

உடலில் பட்ட - சிறு
காயங்களை காட்டி
ஒதுக்கிச்செல்லும்-இந்த
உலகில்!!!!

இரு கரம்...
இரு கால்
இரு கண்...
மொத்தமாய்ச்சொன்னால்
அங்கங்களையே பறி கொடுத்து
அங்கலாய்க்கும் உறவுகளின்
கதிதான் என்ன?
இவர்கள் எதிர்காலத்தை
கை நீட்டி தூக்க
எந்த கடவுள் கைகொடுக்கும்?

சிறகு உதிர்ந்து
புன்னகை இறந்து
வாழ்வின் இன்பங்கள்
முடிவுற்று நீழ்கிறது...!!!


சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகிப் போனதால்
சாகும் வரை
சகித்துக் கொள்ள
காலம் பணித்து
ஏறி மிதித்து நிற்கிறது...


ஈழம் அன்று கிடைத்திருந்தால்
பொன்னாடை போர்த்தி
புகழ்ந்திருப்பார்....
விடுதலையின் அடையாளங்களாக
வீர மிடுக்குடன் மிளிர்ந்திருப்பார்...
இன்று கண்ணீரை மட்டும்
பரிசாக கொடுத்து விட்டு
ஏக்கத்தோடு வரலாறும்
எட்டிப்பார்க்கிறது!!!!

நிறைவேறாத வேட்கையும்
நிறைந்து போன துயரமும் 
நீழ்கின்ற தனிமையும்
நெடுத்துப் போய்
காய்ந்து போன சருகுகளாய்
உலர்ந்து கிடக்கிறது
இவர்கள் மனங்கள்!!!!


இறந்து கொண்டிருக்கும் இவர்களை
உயிர்ப்பித்து விடுங்கள் உறவுகளே
இருண்டு கிடக்கும் வாழ்வில்
ஒளியேற்ற வேண்டும்....!!!!!


செம்பகம்

6.7.11

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....







சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........
இருளுக்குள் நிலவும்
இரகசிய நடப்புகளை
விழித்திருந்து இரசிக்கும்
உன் தனிமை.........
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


முகில் கூட்டம்
முழுதாய் உரசி போகையிலும்
சீற்றமின்றி நீயிருக்கும் அந்த
காட்சி..........
உனக்கும் முகிலுக்கும் ஏதும் மறைமுக உறவோ?
எனக்குள்ளே சிறு கேள்விகளாய்..........

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


நிலவே நீ
சூரியனை கண்டதும்
சட்டென மறையும்
ரகசியம் தான் என்ன......?
எனக்கு மட்டும்
செவியூடே சொல்லாயோ?
வானத்தோடே மட்டும்-நீ
நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
வானுக்கும் உனக்கும்
ஏதும் நட்புறவோ?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


பசுமையைத் தொலைத்த
பட்ட மரங்கள் -உன்
முகம் கண்டு பிரகாசிக்கிறதே.......
சூரியனைக்கண்டு
சாய்ந்த புல் வெளிகள்
பூத்துக்குலுங்குவதாய்
ஒரு தோற்றம்.......
தடி காட்டி
உணவருந்தும் குழந்தாய்
உனைக்கண்ட கணமே
உண்டு தீர்க்கிறதே...
அதற்கான உன் பாசைதான் என்ன?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



இறுக்கமான தருணத்தில்
இயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........
பகலில் உலவும் நிழல் கூட
எனை விட்டு பிரிகிறது
நிலவே உன்
நினைவு மட்டும்
எனை விட்டு பிரிய மறுக்கிறது....

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



செம்பகம்


4.7.11


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?