விறைத்த மனசு
வரண்ட பாதங்கள்
கரடுமுரடான கரங்கள்
கலங்கிய விழிகள்
இடிந்து போன கன்னங்கள்
புன்னகை இழந்த உதடுகள்
எதுவரைக்கும்........
உதிர்ந்து போன கனவுகள்
இடிந்து போன பிரமிட்டுக்களாய்
நித்தம் நித்தம்
நெஞ்சைப் பிளக்க
விரக்தியின் வாசலில்
விம்முகின்ற மனங்கள்
எதுவரைக்கும்................
புத்தம் புதிய மனிதராய்
பூமியில் பிரசவிக்கையில்
அழுகைக் குரலோடு
வெளிவந்த போது
அப்போது அறியவில்லை
ஏனென்ற கேள்விக்கு
இப்போது மட்டும்
விடை புரிகிறது
வலிகளையே நிரந்தரமாக்கி
வாழ்க்கையின் விழிம்பைத்தொட
முயல்கின்ற மனிதர்களின்
ஏக்கங்களாய் .............
செம்பகம்.