உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீநிச்சயமாய் மறுக்க முடியாதவை
எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....
உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????
வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும் மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்,.........
நீ தந்த முத்தம்..........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!
என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......
இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......
தின்றுவாழும் உன் நினைவுகள்......
தூக்கத்தையே தொலைத்து
புரண்டு புரண்டு
படுத்த சாமங்கள்.....
காற்சட்டைக்குள் பத்திரப் படுத்திய -உன்
காகித கிறுக்கள்கள்....-அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............
சாவின் விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தேதப்பித்த பொழுதுகள்.....
தொலை பேசியே பேசமுடியாத
தொலைவில் வாழ்ந்த போதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
பத்துமாதம் சுமந்தவளை தவிர்த்து
உன்னோடு மட்டும் உரையாடிய நேரங்கள்....
இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தைஎண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
நீ அனுப்பிய
நினைவுப் பரிசுகள்....
பிரியங்கள் பகிர்ந்த
காகித மடல்கள்...-உன்
நிழற்படங்களைத் தாங்கிய
சேகர ஏடுகள்.........
சேகரித்து வைத்த
என் கரங்கள்....
எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!
எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....
உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!!!!!!!!!
செம்பகம்
நண்பனின் உண்மைச்சம்பவத்தை வரிகளாக்கினேன்.