23.2.10

நீயில்லை அருகில்.......




















அன்பிற்காய் ஏங்குகின்றேன்

அரவணத்திட ..........
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின்
வேதனையால் தவிக்கிறேன்
தடவிவிட ..........
நீயில்லை அருகில்

தூக்கத்தைத் தொலைத்த
இரவுகளில் விழித்திருக்கின்றேன்
ஏனென்று கேட்க......................
நீயில்லை அருகில்

மனசின் வலிகளை
கொட்டிட என்ணுகிறேன்.......
நீயில்லை அருகில்

சந்தோசத்தைச் சொல்ல
சந்தோசிக்க விரும்புகிறேன்........
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ
எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்

இப்படியே ...........
வலிகளையே வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே உன்
அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே..........


செம்பகம்

No comments:

Post a Comment