26.2.10

நண்பனே நினைவிருக்கிறதா....




















நீயும் நானும்

அருவரியில் அறிமுகமானோம்
படித்தது ஒரே பள்ளி
படிப்பில் மட்டும் போட்டி
குறும்பு வித்தைகளால்
குறையாமல்வேண்டும் தண்டனைகள்
நினைவிருக்கா நண்பனே..?

கணித வாத்தியாரிடம்
காதில் வேண்டும் முறுக்கு
அடிக்க முயன்றால்
அசத்தும் அசல் சிரிப்பு
பக்கத்து வகுப்பு
பரமேசின் சைற்றடிப்பு
வருகிறதா நினைவில்..?

வடிவேல் வாத்தியார்
வாற்கட்டை ஒழித்து
வசமாய் மாட்டியது
மணியக்கா வீட்டு
மாங்காய்க்குகல்லெறிந்து
மண்டை மண்டையாய்
வேண்டியது.........
பள்ளி முன்றலில்
அடிக்கடி இருக்கும்
முட்டுக்கால்.........

தோழா எங்கள்
பள்ளி வாழ்வில்
எத்தனை சந்தோசிப்பு
ஞாபகம் இருக்கிறதா...?
என்னைப்புரிந்திருப்பாய்

இணை பிரியா
நண்பர்கள் அன்று
வெளிநாடு என்று
வெளியேறினாய்
பிரிவிற்காய் துடித்தாய்
வழியனுப்பும் போதும்
விழிகசியச் சென்றாய்

இன்று ..........
நீயாரோ நான்யாரோ
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்புகொள்ள மறுக்கிறாயே
ஏனோ புரியவில்லை...?


செம்பகம்

24.2.10

மீண்டும் மீண்டும் சோதனையா....?


















சொந்த நிலத்தின் சுகமிழந்து
சொந்தங்கள் பலவிழந்து
அகதிகள் பட்டியலோடு
ஆற்றமுடியா வலி சுமந்து
ஏக்கத்தோடு இருக்கும் உறவுகளே!
எங்கள் ஏக்கமூச்சு
எவருக்குத்தான் புரியும்

மூட்டை தூக்கி
மூன்று காசு உழைத்து
மண் உழுது
மாடாய் தேய்ந்து
உரமேறிய தேட்டங்கள்
அரங்கேறிய யுத்தத்தால்
நிலையற்றுப்போனது எம் வாழ்க்கைப்பயணம்

ஊர் விட்டு ஊர்மாறி
உயிரை மட்டும் காவி
ஆறி அமரமுன்னே
அடுத்தடுத்த பெயர்வுகள்......
ஓடினோம்..... ஓடினோம்...

அடுகடுக்காய் கூவிவரும்
அரக்கர் கணைகள்
பல்லாயிரம் உறவுகளை
பலியெடுத்தது
அவலக்குரலே கேட்காத
அதிகாலைக்காய் காத்திருந்தோம்

எங்கு பார்த்தாலும்
உடல்கள்
எதை எடுத்தாலும்
தசைச் சிதைவுகள்
எங்கு நகர்ந்தாலும்
குருதி வெள்ளம்
இறந்தவர் உடல்களை
தொட்டழ நேரமின்றி
பதுங்கு குழிகழுள்ளே
புதைத்துச்சென்றோம்

மொத்தமாய்ச் சொன்னால்
மரணத்தையே தின்று
மரணத்துள்ளே வாழ்ந்தோம்


இப்படியே ......
விலைகள் கொடுத்தோம்
விடுதலை கிடைக்குமென்றே

இன்றும் ........
முட்கம்பி வேலியுள்
முடக்கப்பட்ட கைதிகளாய்
கூடாரமே இருப்பிடமாய்
வரண்டு கிடக்கிறது - இந்த
மனித வாழ்க்கை

நீண்ட வரிசைக்குள்ளே
நீருணவுக்கு மட்டுமின்றி
கழிவுக்கூடத்துக்கும் காத்திருப்பு
இப்படியே
இராணுவ முற்றுகையுள் நகர்கிறது
எங்கள் நரக வாழ்க்கை

திரும்பிப் பார்க்கும் உலகே
தீர்வுகள் எமக்கில்லையா? - உனது
மனித உரிமைகள் எங்கே?
மூடிய விழிகளை திறந்திடாயோ?....

செம்பகம்

23.2.10

பெற்றவளுக்கு.......

















நான்கு பக்க சுவருக்குள்
நலிவுற்றுக்கிடக்கிறேன்
திக்கெல்லாம் எனக்கு
இருளாகித்தெரிகிறது
விதி செய்த சதியா - அல்ல
தமிழ் மகன் என்ற தவறா

பத்துமாதம் கருவறையுள்
பக்குவமாய் சுமந்தாய்
இத்தரையில் பிரசவித்தாய்
சித்திரவதைக்காகவா......?

ஏது பிழை செய்தேன்
இது வரைக்கும் நானறியேன்
சந்தேகமென்று சொல்லி
சாட்டையடி அடிக்கிறார்கள்
உதைக்கிறார்கள்....
மிதிக்கிறார்கள்....
நகத்தைக் கூட
சும்மா விடவில்லை
ஏதேதோ எல்லாம்
என்னைச்சுற்றி நடக்கிறது

கூட இருந்தவர் பலரை
கூட்டிச்சென்றனர் உடையின்றி - அவர்
கெதி என்னென்னவோ

நான்.....இதுவரைக்கும்
துப்பாக்கி தூக்கி
விசைவில் அழுத்தியதில்லை
நீ அறிவாய்

வன்னி மண்ணில் வாழ்ந்து
தமிழை யாசித்தவன் - அங்கு
நித்தமும் நடந்த
யுத்தத்தை கண்டவன்
கொத்துக்கொத்தாய் தமிழரை
கொன்ற விதம் பார்த்தவன்

சிங்கள இராணுவத்தை-முன்பு
சத்தியமாய் கண்டதில்லை
இன்று தான் காண்கின்றேன்
பிணம் கூடத்தின்பார்கள்
குருதியைக்குடிப்பார்கள்
மனிதர் என்ற சொல்லிற்கே
அர்த்தமற்ற மிருகங்கள்

அம்மா
ஆயுதம் தூக்கி அடியென்று
ஆழ்மனசு சொல்கிறது
வன்முறையால் வன்முறையை
அடக்குவது உண்மையம்மா
சந்திரன் உடைந்தால்
நிலவில்லை
சிறைகுள்ளே என்
சுவாசம் அடங்கிப்போனலும்
மறு பிறவியில் உன் மகனாய்
பெற்று விடு அம்மா.


செம்பகம்

எதற்கான போர்ப்பு














தமிழர் உயிர்களின்

அழிப்பிற்கானதா........?

அடைத்து வைத்து தமிழரை
அட்டகாசம் செய்வதற்கானதா....?
அப்பாவி மக்களின்
அழுகைக்கானதா.......

தாகந்தீர்க்க தண்ணீரின்றி
தவிக்க வைக்கும்
கொடுமைக்கானதா.....?

நோயாலே நித்தமும் தமிழர்
வாடுவதற்கானதா.......?

பெற்றோரை இழந்த
உற்றோரைப்பிரிந்த
அனாதைகளாய் அலையவைத்த
அக்கிரமத்திற்கானதா.........?

கொதிக்கிறது இரத்தம்!!!!!!
படுகொலையின் நாயகனுக்கு
பொன்னாடைப் போர்ப்பா?
காரணம் தான் புரியவில்லை


செம்பகம்

நீயில்லை அருகில்.......




















அன்பிற்காய் ஏங்குகின்றேன்

அரவணத்திட ..........
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின்
வேதனையால் தவிக்கிறேன்
தடவிவிட ..........
நீயில்லை அருகில்

தூக்கத்தைத் தொலைத்த
இரவுகளில் விழித்திருக்கின்றேன்
ஏனென்று கேட்க......................
நீயில்லை அருகில்

மனசின் வலிகளை
கொட்டிட என்ணுகிறேன்.......
நீயில்லை அருகில்

சந்தோசத்தைச் சொல்ல
சந்தோசிக்க விரும்புகிறேன்........
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ
எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்

இப்படியே ...........
வலிகளையே வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே உன்
அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே..........


செம்பகம்

21.2.10

துடிப்பு




















எதையோ நினைத்தபடி
கால்கள் நடந்தன
மெல்லிய தென்றல்
மெதுவாய்த் தழுவி
மௌனமாய் சென்றது
மனசுக்குள் ஓர் விறுவிறுப்பு
எதை பார்த்தாலும்
சோபையிழந்த துடிப்பு

அடி வைக்கும் இடமெல்லாம்
பள்ளமும் திட்டியுமாய்.....
முன்பேதும் அறியாத
முகங்களும்.......
எப்போதும் ஒலிக்காத
மொழிகளும்........
புதிதாய் நிறுவப்பட்ட
கட்டடங்களும்.......
எல்லாமே புதிதான
தோற்றத்தில்.......

உதிக்கின்ற சூரியனின்
உதயத்தில் மகிழ்வில்லை
வீசுகின்ற காற்றில்
வாசம் தெரியவில்லை
பச்சை மரங்கள்
பசுமை இழந்ததாய்......
பட்ட மரங்கள்-அதன்
கதை சொல்வதாய்.....

கரைமோதும் அலையில்
நிறைவேதும் இல்லாததாய்....
விரிகின்ற மலர்கள்
வடிவு இழந்ததாய்......
வாழ்கின்ற விலங்கினம்
வலி சுமந்ததாய்......
பறந்து செல்லும்
பறவைக்கூட்டம்
எதையோ தொலைத்ததாய்.....

கண்கள் கண்டதெல்லாம்
கதையாகிப் போனது

அப்போது.........
புரிந்தது மனசு -அங்கு
விஞ்சியிருக்கும் மனிதர்கள் -இனி
சிரிக்கவே மாட்டார்களா....?
ஏக்கத்தோடு நகர்ந்தது கால்கள்



செம்பகம்

3.2.10

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?